×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விபத்தில் இறந்த கணவரின் உடலில் இருந்து எடுத்த உயிரணுக்கள்!. இரட்டை குழந்தை பிறந்த அதிசயம்!.

விபத்தில் இறந்த கணவரின் உடலில் இருந்து எடுத்த உயிரணுக்கள்!. இரட்டை குழந்தை பிறந்த அதிசயம்!.

Advertisement

கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் சுதாகரன், இவருக்கு ஷில்னா என்ற பெண்ணுடன் கடந்த 2006-ல் திருமணம் நடந்துள்ளது. பல வருடங்கள் ஆகியும் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு கல்லூரியின் சக பேராசிரியர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார் சுதாகரன், அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சுதாகரன் உயிரிழந்தார். சுதாகரன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஷில்னாவும் அவரது உறவினர்களும் விரும்பினர்.

குடும்பத்தினரின் விருப்பப்படி விபத்தில் இறந்த சுதாகரனின் உயிரணுக்கள் தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது. பின்னர், அந்த உயிரணுக்கள் மூலம் ஷில்னா கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் நேற்று காலை இரட்டைப் பெண் குழந்தைகளை ஷில்னா பெற்றெடுத்துள்ளார். 

இரட்டை குழந்தை பிறந்ததால் ஷில்னாவின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷில்னாவும் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #after husband death #Pregnancy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story