×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்நாடகாவில் பரபரப்பு.. பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை.!

கர்நாடகாவில் பரபரப்பு.. பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை.!

Advertisement

கர்நாடகா மாநிலம் கலபுர்கியை சேர்ந்தவர் கிரன்ன கவுடா. வழக்கறிஞரான இவர் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த வழக்கறிஞரின் உடலை கைப்பற்றி:பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #advocate #Murder #Crime #Kalarpuki
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story