×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராமர் கோவில் திறப்பு விழாவில் ரூ.50 கோடிக்கு பிரபாஸின் தரமான சம்பவம்.! மெர்சலான ரசிகர்கள்.! 

ராமர் கோவில் திறப்பு விழாவில் ரூ.50 கோடிக்கு பிரபாஸின் தரமான சம்பவம்.! மெர்சலான ரசிகர்கள்.! 

Advertisement

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. கோவிலின் கருவறையில் அமைந்துள்ள ராமரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவன இருக்கிறார். 

மைசூர் சிற்பி தயாரித்த குழந்தை ராமரின் சிலை சமீபத்தில் அயோத்திக்கு எடுத்துவரப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. 

இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள பத்தாயிரம் சிறப்பு விருந்தினர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பீர் சிங் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.அது மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரை துறையை சேர்ந்த பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு விருந்து வைக்கின்ற செலவுகளை நடிகர் பிரபாஸ் ஏற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

முதல் நாள் வெளிநாட்டு அதிகாரிகள், அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் என 800 பேர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அன்று ஒரு நாள் விருந்து செலவு ரூ.50 கோடி வரை ஆகும் என்றும், இந்த செலவை பிரபாஸ் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prabhas #Ayodi ram mandir
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story