×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆணுறையில் மிளகாய்பொடி கரைசல்.. வீங்கிப்போன அந்தரங்க உறுப்புக்கள்.. அலறிய கள்ளக்காதல் ஜோடி.! மனைவிக்கு பேரதிர்ச்சி.!!

ஆணுறையில் மிளகாய்பொடி கரைசல்.. வீங்கிப்போன அந்தரங்க உறுப்புக்கள்.. அலறிய கள்ளக்காதல் ஜோடி.! மனைவிக்கு பேரதிர்ச்சி.!!

Advertisement

பெண்ணொருவர் அவரது தோழியின் கணவருடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த நிலையில், கணவன் எதோ ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளதாக எண்ணி சந்தேகித்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சியாக உண்மை அம்பலமானது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 

இந்தியாவை சேர்ந்த பெண்மணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "எனக்கு திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிறது. எனது கணவரின் காரில் இருந்து ஆணுறையை கண்டெடுத்தேன். இதனால் எனக்கு கணவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது. கணவரிடம் ஆணுறை குறித்து கேட்கையில், அவர் என்னிடம் அதற்கு சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் கணவர் யாருடன் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளார்? என்ற சந்தேகம் தொற்றிக்கொண்டது. 

இதனையடுத்து, சம்பவ நாளில் கணவர் ஆணுறையுடன் வீட்டிற்கு வந்தார். மேலும், அவர் ஆணுறையையும் வைத்திருந்தார். கணவனின் மீதுள்ள சந்தேகம் மேலும் அதிகரிக்க, கணவர் உறங்கும் போது ஆணுறையை எடுத்து, அதில் மிளகாய்பொடி கரைசலை ஊற்றி நனைத்து, மீண்டும் அதனை கணவருக்கு தெரியாமல் வைத்துவிட்டேன். கணவர் எழுந்ததும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். 

வீட்டை விட்டு சென்ற கணவரிடம் இருந்து போன் வராத நிலையில், 4 மணிநேரம் கழித்து எனக்கு எனது தோழி போன் செய்தார். அவர் என்னிடம் தெரிவித்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் ஒரு நண்பருடன் இன்று உடலுறவு மேற்கொண்டேன். உடலுறவுக்கு பின்னர் எனது அந்தரங்க உறுப்பு அதிகளவு எரிச்சலை சந்தித்து, அப்பகுதி வீங்கிவிட்டது. எனது நண்பருக்கும் ஆணுறுப்பு வீங்கிவிட்டது. எரிகிறது என்று கூறுகிறார். என்ன செய்வது? என்று கேட்டுள்ளார். 

அப்போதுதான் எனக்கு உண்மையே தெரியவந்தது. எனது கணவர் எனது தோழியுடன் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளார் என்பதை அறிந்து நொந்துபோனேன். வீட்டிற்கு வந்த கணவரிடமும் எதனையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நிலையில், அவர் ஆணுறுப்பில் வீக்கம் ஏற்பட்டதாக கூறி ஐஸ்கட்டி வைத்து சாதனம் கொடுத்துக்கொண்டு இருந்தார். சில நாட்கள் அமைதியாக இருந்த நான், தீர யோசனை செய்து தோழியின் கணவரிடம் விஷயத்தை தெரிவித்தேன். 

நிலைமையை சுதாரித்துக்கொண்ட அவர், தனது மனைவியை கண்டித்து அவளிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். எனது நட்பையும் அவள் இழந்துவிட்டாள். எனக்கு அவளும், எனது கணவரும் துரோகம் செய்துவிட்டார்கள் என்பதை கூறக்கூட எனக்கு மனம் வரவில்லை. அவர்களின் மீது அவ்வுளவு அன்பை வைத்திருந்தேன்" என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wife #Husband #Affair #condom #Chilly Sauce #Private Parts #Vagina #Penis
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story