×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

92 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்...!! அதிர்ச்சி சம்பவம்..!!

92 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்...!! அதிர்ச்சி சம்பவம்..!!

Advertisement

இரவில் பஸ்சுக்காக காத்திருந்த 92 வயது மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் வசிக்கும் 92 வயது மூதாட்டி, மதுவா கிராமத்தில் இருக்கும் உறவினர்களை பார்ப்பதற்காக, நள்ளிரவில் ஷாடோல் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மதுவா கிராமத்திற்கு போவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது பைக்கில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் மதுவா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி  மூதாட்டியை, இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். ஊர் எல்லையைத் தாண்டியதும் அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மதுவா கிராமத்திற்கு வந்த மூதாட்டி, தனக்கு நேர்ந்த சம்பவத்தை உறவினர்களிடம்  கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மதுவா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரைத் தேடி வருகின்றனர். 92 மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Madhya pradesh #92 Year Old Woman #sexually assaulted
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story