விபரீத உடலுறவுக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி.! பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்.!
நாக்பூரில் வினோத செக்ஸ் ஆசைக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் காபர்கேடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு 30 வயது வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்துள்ளார். 2 பேரும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமாகி குழந்தையும் இருந்துள்ளது. ஆனால் இந்த இவர்கள் இருவருக்கும் இடையே ஐந்து வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த வாலிபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த வாலிபருடன் இருந்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணும், வாலிபரும் கள்ளக்காதலர்கள் எனவும், அவர்கள் அடிக்கடி தங்கும் விடுதிக்கு வந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இரவு உல்லாசமாக இருந்த போது ஆபாச படத்தை பார்த்து அந்த பெண் கள்ளக்காதலனை நாற்காலியில் வைத்து கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டி உள்ளார். வாலிபரின் கழுத்து பகுதியையும் மற்றொரு கயிறால் கட்டி உள்ளார்.
பாலியல் உணர்வை தூண்டுவதற்காக இந்த வினோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெண் கழிவறைக்கு சென்று உள்ளார். இந்த நேரத்தில் வாலிபர் நாற்காலியில் இருந்து தவறி விழுந்ததால் கயிறு அவரது கழுத்தை இறுக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண் தனது கள்ளக்காதலன் பேச்சு மூச்சு இன்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஹோட்டல் ஊழியரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362