தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலியை கொலை செய்து காட்டுப் பகுதியில் எரித்த வாலிபர்... கொடூர சம்பவம்..!!

முக்கோணக் காதல்.... காதலியை கொலை செய்து காட்டுப் பகுதியில் எரித்த வாலிபர்... கொடூர சம்பவம்..!!

a-teenage-girl-has-been-murdered-in-a-love-triangle-in Advertisement

ராய்பூரில் முக்கோணக் காதலால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் தனு குர்ரே ( 26) என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார். தனு குர்ரே கோர்பா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனுவை நவம்பர் 21-ஆம் தேதி முதல் காணவில்லை. நவம்பர் 22-ஆம் தேதி  தனுவின் குடும்பத்தினர், ராய்பூரில் இருக்கும் பாண்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நவம்பர் 21-ஆம் தேதி ஒடிசாவைச் சச்சின் அகர்வால் (28) என்பவருடன் பலங்கிருக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில், தனுகுர்ரேவின் உடல் பாதி சில நாட்களுக்கு முன் பலங்கிர் மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. தனுவின் பெற்றோர் மகளின் உடலை அடையாளம் காட்டினர்.

முதற்கட்ட விசாரணையில் தனு சுட்டுக்கொல்லப்பட்டு, பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. தனு குரே கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வால் நவம்பர் 19-ஆம் தேதி ராய்ப்பூருக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரும் தனு குர்ரேவும் சேர்ந்து ஒரு மாலில் சினிமா பார்த்துள்ளனர். 

படம் பார்த்துவிட்டு திரும்பி வந்ததும், பிலாஸ்பூரில் இருக்கும் இளைஞரிடமிருந்து தனு குர்ரேவின் செல்போனுக்கு அழைப்பு வந்ததுள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. ஆத்திரத்தில் சச்சின் அகர்வால் தனுவை கொன்று பலங்கிர் காட்டுபகுதிக்கு எடுத்துச்  சென்று எரித்து உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Raipur #Girl has been murdered #In a love triangle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story