×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவிகள் மீது பயங்கரமாக மோதிய கார்; தூக்கி வீசப்பட்ட மாணவிகள்..! அலட்சிய வாகன ஓட்டிகளால் நேர்ந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

பள்ளி மாணவிகள் மீது பயங்கரமாக மோதிய கார்; தூக்கி வீசப்பட்ட மாணவிகள்..! அலட்சிய வாகன ஓட்டிகளால் நேர்ந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

Advertisement

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், ராகவேந்திரா பெட்ரோல் பங்க் பகுதியில், இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 4 மாணவிகள் ஒன்றாக பயணம் செய்தனர். 

அப்போது, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகன ஒட்டி தனது வாகனத்தை திரும்பி வலதுபக்க சாலையில் செல்ல முயற்சித்தார். அதாவது யு-டர்ன் எடுக்க முயற்சிகளை கையாண்டார். அந்நேரம் அவ்வழியே கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது. 

அங்கு மழையும் பெய்திருந்த காரணத்தால் சாலைகள் நனைந்து இருந்த நிலையில், கார் ஓட்டுனரால் வாகனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால், அவரின் மீது கார் மோதியது. 

அதே வேகத்தில் அங்கு சாலையோரம் நடந்து சென்றுகொண்டு இருந்த மாணவிகளின் மீதும் வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி, வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலை நடுவே விழுந்தார். 

பள்ளி மாணவிகளில் 2 பேர் மீது கார் மோதியதில், அவர்களில் ஒரு மாணவி நிகழ்விடத்திலேயும், மற்றொரு மாணவி சிறிது தூரம் தள்ளியும் தூக்கி வீசப்பட்டனர். இவ்விவகாரத்தில் வாகன ஓட்டிகள் இருவரின் மீதும் தவறு உள்ளதால், விசாரணை நடந்து வருகிறது. 

நல்வாய்ப்பாக பள்ளி மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி என அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #karnataka #Raichur #Trending Video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story