×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்...!!

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்...!!

Advertisement

சிகலா என்ற பெண் ரயிலில் இருந்து இறங்கியபோது தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக்கொண்டார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள அன்னாவரம் பகுதியை சேர்ந்த எம்சிஏ முதலாம் வருடம் படிக்கும் மாணவி சசிகலா. இவர் கல்லூரி செல்வதற்காக நேற்று முன் தினம் புறநகர் ரயிலில் விசாகப்பட்டினத்தில் இருக்கும் துவ்வடா ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து  ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே மாட்டிக்கொண்டார். 

இதை பார்த்த அங்கிருந்த பொது மக்கள் உடனடியாக ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ரயில் நிறுத்தப்பட்டது. சசிகலாவை சக பயணிகள் மீட்க முயற்சித்தனர். ஆனால், ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட அவரை மீட்க முடியாமல் போராடினர். அங்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், ரயில்வே பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், சசிகலாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் ஒன்றரை மணி நேர தீவிர போராட்டத்திற்கு பிறகு சசிகலா மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். சசிகலாவின் உடலில் கடுமையாக உள் காயம் ஏற்பட்டிருந்தது. எனவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவி சசிகலா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் உள் உறுப்புகள் செயல் இழந்ததால் சசிகலா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரயில் நடைமேடையில் சிக்கி மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra Pradesh #Visakhapatnam #railway platform #Young Woman #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story