×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுமிகளை மட்டும் குறிவைத்து... அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாடகர் கைது.!

சிறுமிகளை மட்டும் குறிவைத்து... அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாடகர் கைது.!

Advertisement

பீகார் மாநிலத்தைச் சார்ந்த பிரபல போஜ்புரி பாடகர்  னசிறுமிகளை வன்கொடுமை செய்து அவர்களது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் நாடகிலும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலம்  குரு கிராம் நகரில் வசித்து வருபவர் பிரபல போஜ்பூரி பாடகர்  அபிஷேக். 21 வயதான இவரை சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றி இருந்தார்‌. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.

அவர்களது புகாரை தொடர்ந்து பாடகர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில்  சிறுமிகளுடன் பழகிய போது அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக  வாக்குமூலம் அளித்திருக்கிறார் அபிஷேக்.

மேலும் அந்த நேரங்களில் எடுக்கப்பட்ட அவர்களது அந்தரங்க புகைப்படங்களை தான் இன்ஸ்டால் பதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#haryana #Bihar #bojpurisinger #childmolestation #arrested
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story