×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இண்டிகோ பிளைட் ல பாம் இருக்கு.. பயணியின் பரபரப்பு செயல்., அலறிய அதிகாரிகள்.. இறுதியில் விலகிய மர்மம்.!

இண்டிகோ பிளைட் ல பாம் இருக்கு.. பயணியின் பரபரப்பு செயல்., அலறிய அதிகாரிகள்.. இறுதியில் விலகிய மர்மம்.!

Advertisement

டெல்லிக்கு செல்லவேண்டிய அந்த விமானத்தில் பாம் இருப்பதாக பயணி தகவல் சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க, பதறிப்போன அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் பரபரப்பாய் செயலாற்றி ஏமாற்றமடைந்தனர். 

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 8.20 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போனில் மர்ம நபர், டெல்லிக்கு செல்லும்  விமானத்தில் குண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, உஷார் நிலைக்கு உள்ளான அதிகாரிகள் பயணிகள் மற்றும் விமான குழுவினரை அவசர கதியில் வெளியேற்றினர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது, எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை., அதற்கான தடயம்மும் தெரியவில்லை. இதனால் மர்ம நபர் அதிகாரிகளை அலைக்கழிக்க இவ்வாறான செயலை செய்தது அம்பலமானது. விசாரணையில், விமானத்தில் செல்லவிருந்த பயணியே போலியான புரளியை கிளப்பிவிட்டது அம்பலமானது. அதனைத்தொடர்ந்து, பயணி கைது செய்யப்பட்டார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#flight #Bihar #Patna #delhi #India #indigo #Airport Police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story