×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பருடன் சேர்ந்து மனைவியை ஓட, ஓட விரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கணவன்..!

நண்பருடன் சேர்ந்து மனைவியை ஓட, ஓட விரட்டி பாலியல் வன்கொடுமை செயத கொடூர கணவன்..!

Advertisement

மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டம் கவுதம் நகரில் வசித்து வரும் பெண். இவருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பெண்ணின் கணவர் சின்ன சின்ன விசயங்களுக்காக அவரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் கணவருடைய நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வர தொடங்கியுள்ளார். இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதன் பின்னர் அவரது கணவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் புது டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால், அவரை இருவரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன் பின்னர் இந்தூருக்கு வந்த அந்த பெண், அங்கே ஒரு ஆசிரமத்தில் தஞ்சமடைந்துள்ளார். அங்கேயும் வந்த அவர்கள் இருவரும் அந்த பெண்ணை தங்களுடன் வரும்படி நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதற்கு, அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பெண்ணின் கணவர் அவருக்கு முத்தலாக் கொடுத்து விட்டார். இதில் மனமுடைந்த அந்த பெண், இந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்கு பதிவு செய்து, அவர்களது சொந்த ஊரான கவுதம் நகர் போலீசாருக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கவுதம் நகர் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தி, பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் நண்பரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #Bopal #Gautam Nagar #police arrest #Sexual Harassment
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story