"எங்க அம்மா காண்டத்தை வச்சிருக்காங்கோ" - தாயின் அந்தரங்க விஷயத்தை ஊருக்கே அம்பலப்படுத்திய மகளின் பகீர் செயல்..!
எங்க அம்மா காண்டத்தை வச்சிருக்காங்கோ - தாயின் அந்தரங்க விஷயத்தை ஊருக்கே அம்பலப்படுத்திய மகளின் பகீர் செயல்..!
இந்தியாவை பொறுத்தமட்டில் பாலியல் ரீதியான விஷயங்கள் பொதுவெளியில் பேச கூச்சப்படும் ஒன்றாகும். இதில் இன்றளவில் உள்ள பலரும் தங்களின் சொந்த சமூக வலைதள கணக்கில் நல்ல கருத்துக்களை பதிவு செய்தாலும், திரைமறைவில் போலியான கணக்கை வைத்து தங்களின் கருத்துக்களை பேசி வருகின்றனர்.
சிலர் எவ்வித ஒளிவு-மறைவும் இன்றி தங்களின் கருத்துக்களை நெற்றிப்பொட்டில் அடித்தார் போல கூறுவார்கள். இன்றுள்ள சிறார்கள் தங்களுக்கு என தனியுரிமை கேட்டு பெற்றோரிடம் சண்டையிட்டாலும், அவர்கள் அடுத்தவர்களின் தனியுரிமையில் தலையிடுவதில் வல்லவர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் அலமாரியை சோதித்தபோது, தாயின் தனிப்பட்ட அறையில் ஆணுறை (Condom) இருந்துள்ளது. இதனை நானும், அண்ணனும் தேடியபோது கிடைத்தது என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.