×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம்  கிரெடிட்

Advertisement

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம்  கிரெடிட் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா பகுதியைச் சேர்ந்த உயர்நிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்கள் இவர்கள், தங்கள் பள்ளியில் சீருடைக்கு அரசு அனுப்பிய பணத்தைச் சரிபார்க்க பெற்றோருடன் அருகில் இருந்த வங்கிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களின் அறிக்கையை சரிபார்த்தபோது, ​​அவர்கள் கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில், ஆஷிஷ் குமார் என்ற சிறுவனின் கணக்கில் ரூ. 60 கோடியும், மற்றோரு சிறுவன் குருசந்திர விஸ்வாஸ் கணக்கில் நமபமுடியாத அளவில் ரூ. 900 கோடி பணம் இருந்துள்ளது.

இதனையறிந்த வங்கி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த பணத்தை எடுக்கமுடியாதபடி முடக்கியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school student #960 crores
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story