×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

9 person died in fire accident

Advertisement


டெல்லி கிராரி என்ற இடத்தில்  உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்,  9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்துள்ளனர். 

டெல்லியின் கிராரி பகுதியில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

இந்த கொடூர விபத்தில் உடல் கருகி 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fire accident #delhi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story