×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரும் துயரச் சம்பவம்... ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்... கதறும் குடும்பத்தினர்!!

தொடரும் துயரச் சம்பவம்... ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்... கதறும் குடும்பத்தினர்!!

Advertisement

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 8 வயது சிறுவன் நேற்றைய தினம் தவறி விழுந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அடுத்து விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 48 அடி ஆழத்தில் சிக்கி உள்ள சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும், சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 மாநில மீட்பு படை அணிகள் மற்றும் ஒரு தேசிய மீட்பு படை அணி ஆகியோர் சேர்ந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 15 மணி நேரங்களுக்கு மேலாக இந்த மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு அதன் மூலம் சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mathiya pradesh #Borehole #8 years old boy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story