36 வயது பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்து செய்த கொடூரம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!
7 people tortured women

கர்நாடக மாநிலத்தில் பலரிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப தராத பெண்ணை ஒரு கும்பல் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் அப்பகுதியில் சிறிய உணவகம் மற்றும் சிட்பண்ட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்தநிலையில், ராஜாமணி சமீபத்தில் சிலரிடம் ரூ.50,000 கடன் வாங்கிய நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜாமணி பலரிடம் வாங்கிய கடனை நீண்ட நாட்களாக திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று ராஜாமணியை கடன் கொடுத்த சிலர் மின்கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், நீண்ட நேரமாக ராஜாமணியை மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.