7 பிள்ளைகள்..! பேரன் பேத்திகள்..! 62 வயது பாட்டிக்கு 22 வயது இளைஞனுடன் காதல்.! திகைத்துப்போன போலீசார்..!
60-year-old mother of 7 kids falls in love with 22-year-old man in Agra
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் பகுதி எட்மாடுடாவுலா காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் மிகவும் வித்தியாசமான புகார் ஒன்று வந்துள்ளது. 60 வயது மூதாட்டியின் கணவர் மற்றும் மகன் அந்த புகாரை அளித்திருந்தனர்.
அந்த புகாரில், 60 வயதாகும் தனது மனைவியை 22 வயது இளைஞர் ஒருவர் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்வேன் என எனது மனைவியும் கூறுவதாகவும், அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் கூறியிருந்தது.
இதனை கேட்டு குழப்பட்டமடைந்த போலீசார் குறிப்பிட்ட பெண், 22 வயது இளைஞர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை விசாரிக்க ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் யார் எதிர்த்தாலும் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும், கட்டாயம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் எவ்வளவோ கூறியும் இருவரும் கேட்பதாக இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்த போலீசார், அந்த இளைஞர் மீது அமைதியை குலைக்கும் விதத்தில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்த 60 வயது பாட்டிக்கு 7 பிள்ளைகள் உள்ளார்களாம்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362