×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீராத கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

தீராத கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

Advertisement

கேரளா மாநிலம் பாலக்கோடு அருகே உள்ள ஜந்துபாரா பகுதியில் சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ். இவர் தனது குடும்பத்தினருடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஜெய்சல் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Loan problem #KERALA #suicide #Balakad
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story