×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்..! சில மாதங்களில் காத்திருந்த பேரதிர்ச்சி..!

45 years old women cheated 77 years old man

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பெரும் பணக்காரர் பஸ்தாரியா. 77 வயதாகும் பஸ்தாரியாவின் முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் இரண்டாவது திருமணம் செய்ய நினைத்த பஸ்தாரியா இதுகுறித்து விளம்பரம் கொடுத்துள்ளார்.

பஸ்தாரியாவின் விளம்பரத்தை பார்த்து அவரை திருமணம் செய்துகொள்ள தயார் என 45 வயது பெண் ஒருவர் பஸ்தாரியவை அணுகியுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் தனது சகோதரர்கள் என இருவரை அந்த பெண் பஸ்தாரியாவின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

மேலும், தங்களுக்கு பல ஏக்கர் இடம் இருப்பதாகவும், அதனை துபாயில் உள்ள தங்கள் உறவினர்களிடம் விற்று அந்த பணத்தை உங்களிட்டமே கொடுத்துவிடுவதாகவும், ஆனால், நிலத்தை விற்பனை செய்ய சுமார் 15 லட்சம் பணம் தேவை படுவதாகவும் அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அவரும் 15 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பின்னர், இதுபோன்று பல காரணங்களை கூறி அந்த பெண் சுமார் 40 லட்சம், பஸ்தாரியாவின் கார் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணையும், அவருடன் இருந்த அந்த இரண்டு நபர்களையும் காணவில்லை.

தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்த நிலையில் இதுகுறித்து பஸ்தாரியா காவல் நிலையாயத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண் இதற்குமுன் இதுபோன்று 10 வயதான நபர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் சுருட்டியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story