மகள் வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 45 வயது நபர்!! நண்பன் என நம்பி வீட்டிற்குள் விட்ட பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
மகள் வயது பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகள் வயது பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (45). மனைவியை பிரிந்து தனது 16 வயது மகன் மற்றும் 14 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். பந்தல் போடும் தொழிலாளியான இவருக்கு, தொழில் ரீதியாக குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த நபரின் வீட்டிற்கு பழனிச்சாமியின் அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது அந்த நபரின் 14 வயது மகளுடன் பழனிசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் சிறுமியை வீட்டில் காணவில்லை. விசாரித்தபோது பழனிசாமிதான் சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதனை அறிந்த பதறிப்போன பெற்றோர், உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்து பழனிசாமி மற்றும் சிறுமியை போலீசார் தேடிவந்தநிலையில், சோமனூர் அருகே சிறுமியுடன் பழனிச்சாமி பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனே அங்கு சென்று பழனிசாமியை கைது செய்து, சிறுமியை போலீசார் மீட்டனர். பழனிசாமியிடம் விசாரித்தபோது, சிறுமியை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நதியதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362