பிணத்துடன் நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஒரு சவாரி: கடன் கொடுத்ததால் நேர்ந்த சோகம்!...
பிணத்துடன் நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஒரு சவாரி: கடன் கொடுத்ததால் நேர்ந்த சோகம்!...
வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல், கடன் கொடுத்தவரையே கொலை செய்து இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு சுற்றிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஸ்வேதா என்பவர் அவரது தோழி துர்கி என்பவருக்கு கடன் கொடுத்து இருந்தார். துர்கி கடனை திருப்பி கொடுக்காததால் இருவருக்குள்ளும் சண்டை நடந்தது.
இதனால் துர்கி தனது கணவர் ரகுவுடன் சேர்ந்து நேற்று முன்தினம் சுவேதாவை கொலை செய்தார். இதற்கு உடந்தையாக அவரின் நண்பர்கள் வினோத் நாகராஜ் உடன் இருந்தனர். மேலும், இறந்த ஸ்வேதாவின் உடலை எங்கேயாவது கண்காணாத இடத்தில் எறிந்து விட்டு வரலாம் என்று முடிவெடுத்து, அவர்கள் ஒரு பைக்கில் சுவேதாவின் உடலை தூங்குவது போல் செட்டப் செய்து ஏற்றி சென்றனர்.
அதன் பிறகு அந்த இரு சக்கர வாகனம் ஒரு இடத்தில் ஆக்சிடென்ட் ஆனதால் ஸ்வேதாவின் பிணம் ரோட்டில் விழுந்து விட்டது. இதையறிந்த காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று, அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் அந்த பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜ் வினேத் துர்கி ரகு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362