×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் அசந்து தூங்கிய பெற்றோர்.! உள்ளே நுழைந்த சிறுத்தையால் 3 வயது குழந்தைக்கு நிகழ்ந்த சோக சம்பவம்..!

3 years child killed by tiger

Advertisement

பெங்களூர் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சசிரேயனபாளையா பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்துள்ளார். சந்திரசேகரனுக்கு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் அதிகாலையில் சந்திரசேகர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அசந்து தூங்கி கொண்டிருந்த சமயத்தில் உள்ளே நுழைத்த சிறுத்தை 3 வயது சிறுவனை தூங்கி சென்றுள்ளது. அதனை அடுத்து விடிந்ததும் சந்திரசேகர் தனது குழந்தையை தேடியுள்ளார்.

அப்போது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் குழந்தை குதறிய நிலையில் சடலமாக கிடந்துள்ளான். மேலும் குழந்தையின் சடலத்திற்கு பக்கத்தில் சிறுத்தையின் காலடி தடம் இருந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்கும் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tiger #3 years child #death
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story