×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பரிதாப பலி! ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

3 years child died in borewell

Advertisement

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வரும் கோவர்தன் என்பவரின் 3 வயது குழந்தை சாய் வர்தன், விவசாய நிலத்தில் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் சென்றுள்ளான். அந்தப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன், 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான்.

இதனைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு மீட்பு பணியை தொடர்ந்து வந்தனர். ஆனாலும் இந்த முயற்சியில் பலனின்றி சிறுவன் உயிரிழந்து விட்டான்.ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இதே போல திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேரம் மீட்புப் பணிகள் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்கள் பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#child #died #Borewell
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story