பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய 5 நாட்களில் விபரீதம்! 22 வயது இளம்பெண் மர்ம மரணம்!
பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய 5 நாட்களில் விபரீதம்! 22 வயது இளம்பெண் மர்ம மரணம்!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் திருமணமான ஐந்து மாதங்களிலேயே 22 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், கணவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டம் க்யோலடியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோதி ஜாகீர் கிராமத்தைச் சேர்ந்த சோனு குமாருக்கும், பார்கேடா பகுதியைச் சேர்ந்த துலாராமின் மகள் பிரியங்காவுக்கும் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணமாகி சுமார்5 மாதங்களே ஆன நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பிரியங்கா தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பிரியங்காவின் தந்தை துலாராம், உறவினர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை தொடர்பாக கணவர் வீட்டார் தொடர்ந்து பிரியங்காவைத் துன்புறுத்தி வந்ததாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!
திருமணத்தின்போது தங்களால் முடிந்த அளவுக்கு சீர்வரிசை மற்றும் பொருட்களை வழங்கியதாகவும், இருப்பினும் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் துலாராம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஐந்து நாட்களுக்கு முன்புதான் பிரியங்கா தனது பெற்றோர் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரியங்காவின் கழுத்தில் கயிற்றின் தடயங்கள் இருந்ததாகவும், இதனால் அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தந்தை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் போலீஸ் விசாரணைக்கு உட்பட்ட நிலையில் உள்ளன. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆய்வாளர் வேத் சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரியங்காவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கணவர் வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரியங்காவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சோனு குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியங்காவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவனா? தோழியா? 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!