×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

22 வயது இளைஞர் செய்த கொடூர செயல்; 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்..!

22 வயது இளைஞர் செய்த கொடூர செயல்; 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்..!

Advertisement

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள குண்டாமரே கிராமத்தை சேர்ந்த சிறுவன்(4) கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போனார். சிறுவனை காணாமல் அவரின் வீட்டில் உள்ளவர்கள் தேடத் தொடங்கினர். 

அப்போது பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், காணாமல் போன சிறுவனை பக்கத்து வீட்டில் பார்த்ததாக கூறியுள்ளனர். பெற்றோர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த வீட்டு மாடியில் காணாமல் போன சிறுவன், அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான். 

உடனே அவனது பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த 22 வயது உறவுக்கார இளைஞர் தலைமறைவானார். 

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இன்ஜினியரிங் படித்து வரும் அந்த இளைஞர், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 

மேலும் சிறுவன் உண்மையை வெளியே சொல்லிவிடுவான் என்ற பயத்தில், அவனை மாடியில் உள்ள இரும்பு கதவில் அடித்து கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனை போக்சே  சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Sexual assault #4 Year Old Boy #State of Odisha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story