2020 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்! ஆவலுடன் எதிர்பார்க்கும் பொதுமக்கள்!
2020 budget
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று காலை சரியாக 11 மணிக்கு கூடியது. மக்களவைக் கூடியதும், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை தொடங்கினார்.
* இந்தியாவில் படிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம் ஆசிய, ஆப்ரிக்க மாணவர்களுக்காக SAT தேர்வு நடத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
* 2023க்குள் 2 மிகப்பெரிய வர்த்தக வழித்தடங்கள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.
* மத்திய பட்ஜெட் தாக்கல் - கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் - கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது.
* கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு, விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என நிதியமைச்சர் கூறினார்.
* கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம், பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பெண்கள் உள்ளிட்டோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் நோக்கம் கொண்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362