×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபர்... அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!!

ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபர்... அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!!

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெரு நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்தக் குழந்தையை அவரது வீட்டு அருகில் இருக்கும் 35 வயதுடைய நபர் ஒருவர் தினமும் நோட்டமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் குழந்தையின் பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து அந்த பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் அந்த நபர். வெளியே சென்று வீடுத் திரும்பிய பெற்றோர் தொடர்ந்து குழந்தை அழுவதை பார்த்து உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பக்கத்து வீட்டுக்கார நபர்தான் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகியுள்ளது. அதனையடுத்து அந்த நம்பரை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெற்றோர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rape #20 month girl baby #arrest #Mumbai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story