×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கூல்ட்ரிங்ஸ்தானேனு நம்பி குடித்த இளம் பெண்.. பேருந்தில் வைத்து பாலியல் கொடுமை செய்த கொடூரம்.. ஒருவர் கைது.

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்து

Advertisement

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நவி மும்பையின் கார்கர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவரை பேருந்து ஒன்றில் வைத்து இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகள் இருவரும் ஒரே கட்டிடத்தில் தான் தங்கிவந்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த அன்று அங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்த பெண்ணிற்கு கூல்ட்ரிங்சில் மயக்கமருந்து கொடுத்து, பின்னர் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர்.

இரண்டு குற்றவாளிகளில் ஒருவன் அந்த பேருந்தின் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளில் ஒருவனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Abuse
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story