"காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்..." 19 வயது சிறுமியிடம் உள்ளூர் மிருகங்கள் வெறிச்செயல்.!!
காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்... 19 வயது சிறுமியிடம் உள்ளூர் மிருகங்கள் வெறிச்செயல்.!!
ஒடிசாவின் புரி மாவட்டம் பாலிஹர்ச்சண்டி கோவிலருகே அமைந்துள்ள கடற்கரையில் இந்த கொடூர சம்பவம் நடந்ததுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்
கடந்த செப்டம்பர் 13 சனிக்கிழமையன்று மதியம் கல்லூரி மாணவி தனது காதலனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்த போது அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் இவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அதை நீக்குவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் காதல் ஜோடி பணம் தர மறுத்ததால் அந்த குழுவிலிருந்த 2 இளைஞர்கள் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மற்ற 2 இளைஞர்கள் காதலனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்தே புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்
இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!
குற்றவாளிகள் மூவரை கைது செய்த போலீசார் நான்காவது நபரை தேடி வருகின்றனர். மேலும் பாலிஹர்ச்சண்டி கோவில் மற்றும் அதன் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இப்பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சஞ்சய் தாஸ் பர்மா வற்புறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தளங்களில் அடிக்கடி நடப்பது வருத்தமளிக்கிறது என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!