×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பெண் கடத்தி சீரழித்து படுகொலை.. சிறுவனுக்கு போலீசார் வலைவீச்சு.!

இளம் பெண் கடத்தி சீரழித்து படுகொலை.. சிறுவனுக்கு போலீசார் வலைவீச்சு.!

Advertisement

கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தல்லியில் உள்ள காபி போர்டு அருகே பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடைப்பதாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பல அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், கொலை செய்யப்பட்ட பெண் ராய்ச்சூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர் வேலை முடிந்து மாலை வேலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, 18 வயது சிறுவன் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளான்.

அதன் பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #bangalore #raped #harassment #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story