×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம்..." 15 வயது மாணவன் கொலை.!! சிறுவன் கைது.!!

காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம்... 15 வயது மாணவன் கொலை.!! சிறுவன் கைது.!!

Advertisement

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவன், தனது பள்ளியில் பயிலும் ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் நடந்த பிறகு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் உரையாடிய இன்ஸ்டாகிராம் சாட் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

15 வயது மாணவனை கத்தியால் குத்திய சிறுவன் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள பள்ளியில் நயன் என்ற 15 வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நயன் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நயனிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறான். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நயனை குத்தி விட்டு அந்த மாணவன் மற்றும் அவனது நண்பர்கள் தப்பி சென்றுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி மரணம் இந்நிலையில் காயமடைந்த மாணவன் ரத்த வெள்ளத்தில் பள்ளிக்கு ஓடி வந்து உதவி கேட்டுள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பள்ளியில் விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!

இன்ஸ்டாகிராம் சாட் மூலம் சிக்கிய கொலையாளி காவல்துறையினர் பள்ளியில் விசாரித்ததில் அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நயனை கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினரின் விசாரணையில் அந்த மாணவர்கள் இன்ஸ்டாகிராம் சாட் மூலம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் கொலைகார சிறுவனை கைது செய்துள்ளனர். நயன் கத்தியால் குத்தப்பட்ட பிறகு அவன் உயிரிழந்தது தொடர்பாக அந்த மாணவர்கள் பேசியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் அடிப்படையில் விசாரணை செய்து கொலை செய்த சிறுவனையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #gujarat #Murder #Crime #Instagram Chat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story