×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடூரத்தின் உச்சம்... 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை... 3 பேரிடம் காவல்துறை விசாரணை.!

கொடூரத்தின் உச்சம்... 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை... 3 பேரிடம் காவல்துறை விசாரணை.!

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிலக்கரி சுரங்கத்தில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள நிரிசிங்புரா கிராமத்தில் 14 வயது சிறுமி நேற்று வழக்கம் போல் வீட்டில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மதிய வேலை கால்நடைகள் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றன. ஆனால் சிறுமி திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய போது அருகில் இருந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏதோ எரிவது போல் தெரிந்திருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது மனித எலும்புகள் மற்றும் சிறுமி பயன்படுத்திய வளையல், செருப்பு  ஆகியவையும் கிடந்துள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர், சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிலக்கரி சுரங்கத்தில் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #rajasthan #Child abuse #Rape #Crime #burnt to death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story