தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆதரவற்ற 14 வயது சிறுமியை 6 மாதமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்: கணவன் - மனைவியாக அதிர்ச்சி செயல்.!

ஆதரவற்ற 14 வயது சிறுமியை 6 மாதமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்: கணவன் - மனைவியாக அதிர்ச்சி செயல்.!

14 Aged Minor Girl forced To Prostitution last 6 Months  Advertisement

 

பீகார் மாநிலத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். பீகாரிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்குள்ள சாதர் பஜார் பகுதியில் இருக்கும் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஆறு மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து வந்த சிறுமி ஆதரவற்றவர் என்பதால் அவரை தேடி யாரும் காவல்நிலையத்தில் கூட புகார் அளிக்கவில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பு ஒன்றை பயன்படுத்தி சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று விபரத்தை கூறியதை தொடர்ந்து, அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். 

இந்த விசாரணையில், பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா மாவட்டத்தைச் சார்ந்த இர்ஷத் என்ற 30 வயது நபர் சிறுமியை கடத்தியது உறுதியானது. மேலும் 45 வயதுடைய ஹஷ்பல், 36 வயதுடைய அவரது மனைவி சஞ்சரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #India #prostitution #Minor Girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story