13 வயது சிறுமி... 6 பேர்... 28 நாட்கள்... நாட்டையே உலுக்கிய கூட்டு பாலியல் வன்புணர்வு.!
13 வயது சிறுமி... 6 பேர்... 28 நாட்கள்... நாட்டையே உலுக்கிய கூட்டு பாலியல் வன்புணர்வு.!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடத்தப்பட்டு 28 நாட்கள் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அந்த பெண்ணிற்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி சரையா சவுக் என்ற இடத்தில் சென்று மகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அங்கு அந்த சிறுமியின் தாயார் சென்று பார்த்த போது சிறுமி மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் .