×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம்பெண்ணை 13 கிலோமீட்டர்..... கொடூரமாக காரில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற போதை ஆசாமிகள்...!!

இளம்பெண்ணை 13 கிலோமீட்டர்..... கொடூரமாக காரில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற போதை ஆசாமிகள்...!!

Advertisement

டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை காரில் நிர்வாண நிலையில் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. குடி போதையில் கார் ஓடியதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். 

டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங்(20) என்ற பெண், சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் வந்த கார் மோதியது. அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியது காரில் வந்தவர்கள் காரை நிறுத்துவதற்குப் பதிலாக, உடலை 13 கிமீ வரை இழுத்துச் சென்றுள்ளனர்.

டெல்லியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றது. கஞ்சவாலா  சாலையில் கடை வைத்துள்ள தீபக் டாஹியா என்ற நபர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று அவர் கடையில் படுத்து தூங்கியுள்ளார். அவர் தூங்கிக்கொண்டு இருந்த போது அதிகாலை வெளியே டமார் என்ற சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, போலீனோ கார் ஒன்று முன் பக்கம் ஸ்கூட்டி ஒன்றை இழுத்தபடி சென்றுள்ளது. 

பெண் ஒருவர் அந்த ஸ்கூட்டியில் இருந்துள்ளார். அந்த காரை நிறுத்த தீபக் டாஹியா முயற்சி செய்துள்ளார். ஆனால் காரை நிறுத்த முடியவில்லை. உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
பத்து நிமிடத்தில் அந்த கார் மீண்டும் அதே சாலையில் திரும்பி வந்துள்ளது. இந்த முறை ஸ்கூட்டி மிகவும் சேதம் அடைந்து அந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மிகவும் சேதமடைந்து இருந்துள்ளது. கார் இந்த முறையும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. 

4 கிமீ உள்ள அந்த ரோட்டில் மீண்டும் மீண்டும் அந்த கார் நான்கு ஐந்து முறை முன்னும், பின்னும் சென்று வந்துள்ளது. சுமார் 20 கிமீ தூரத்திற்கு அந்த கார் பயணம் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கார் முன்னும் பின்னும் சென்று வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினருக்கு வந்த தகவலின் பேரில் 4.40 மணிக்கு காவல்துறையினர் சுல்தான்புரியில் அந்த பெண்ணின் உடலை மீட்டனர். 

கார் நம்பரை வைத்து, அந்த காரில் பயணம் செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ரேஷன் கடை ஊழியர் மற்றும் கிரடிட் கார்டு ஏஜெண்ட் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண் அமர் விஹார் பகுதியில் வசித்து வந்தவர். இவருக்கு நான்கு தங்கைகள், இரண்டு தம்பிகள் உள்ளனர். விபத்துக்குள்ளான பெண்ணை அந்த ஐந்து ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் எங்களுக்கு எதுவுமே தெரியாது, விபத்தை நாங்கள் ஏற்படுத்தவில்லை. நாங்கள் காரில் பாட்டு போட்டு கொண்டு சென்றோம். அதனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களை காவல்துறையினர் கைது செய்த போதுதான் இந்த சம்பவமே எங்களுக்கு தெரிய வந்தது என்று கூறியுள்ளனர். அது பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அவரின் உடலின் உள் பாகங்கள் வெளியே கிழிந்து தொங்கியது. ஆடை மொத்தமாக கிழிந்துவிட்டது என்று என்று தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அஞ்சலியின் தாயார், எனது மகள் ஆடைகள் அணிந்திருந்தாள், ஆனால் அவள் உடலில் ஒட்டு துணி கூட இல்லை, இது எந்த வகையான விபத்து என்று கூறியுள்ளார். மேலும் எங்கள் குடும்பத்தில் சம்பாதிப்பவர் எனது மகள் மட்டும் தான் என கூறி கதறி அழுதார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #New Delhi #The drug addicts #young girl naked in the car
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story