வயிறு வலியால் துடித்த 12 வயது சிறுமி! பரிசோதனைக்கு பின் காத்திருந்த பேரதிர்ச்சி!
12 years old kerala girl abused by school teacher
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களாக வயிறு வழியால் துடித்துள்ளார். இந்நிலையில் சிறுமியை சோதிப்பதற்காக அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்களின் சோதனைக்கு பிறகு அவர்கள் சொன்ன காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குறிப்பிட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிஉள்ளன்னர். இதனால் சிறுமியை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று நடந்ததை பற்றி பெற்றோர் விசாரித்துள்னர். இதில் அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் அந்த சிறுமியை கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், அந்த சிறுமியை மிரட்டி அவருடன் அந்த ஆசிரியர் உறவிலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தீவிரவமாக தேடி வருகின்றனர்.