×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இறந்த பின்பும் 4 பேருக்கு வாழ்வளித்த 11 வயது சிறுமி! வேதனையிலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!

இறந்த பின்பும் 4 பேருக்கு வாழ்வளித்த 11 வயது சிறுமி! நெகிழ்ச்சி சம்பவம்!!

Advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உறுப்புகள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் மண்டியைச் சேர்ந்தவர் நய்னா தாக்கூர்.  11 வயது நிறைந்த அந்த சிறுமி மார்ச் 3ம் தேதி பெரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும்,  அச்சிறுமி சில தினங்களில் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதனால் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் சிறுமியின் இரு சிறுநீரகங்களும் பொருத்தமான நபர்களுக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது. மேலும் கருவிழிகளும் இரண்டு பார்வையற்றவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் இறந்தும் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் என அவரது பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Organ donation #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story