×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அத்தை வீட்டில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள... சிகிச்சை பெற்று வரும் சிறுமி.!

அத்தை வீட்டில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள்... சிகிச்சை பெற்று வரும் சிறுமி.!

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த 11 வயது சிறுமி  கற்பழிக்கப்பட்ட வழக்கில் அவரது உறவினர்களான 13 வயது மற்றும் 15 வயது  சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அடங்கிடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் உதைபூர் மாவட்டத்தில் உள்ள  அந்த மாதா பகுதியைச் சார்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவரது அத்தை வீட்டில் இருந்த 13 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவர்  தனியாக விளையாடலாம் எனக் கூறி சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்த அந்த இரண்டு சிறுவர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதை வெளியே கூறினால்  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சிறுமியை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உள் காயம் ஏற்படவே  இது தொடர்பாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். என்னைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள்  இந்த மாத காவல்துறையை தொடர்பு கொண்டு  புகார் அளித்தனர்.

அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இரண்டு சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இரண்டு சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு  உயிர் ஆபத்தான நிலையில் திரும்பி மருத்துவமனையில் இருக்கும் சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajasthan #India #gangrape #girlcritical #twoboyscustody
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story