×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெற்றோர்! 11 மாத குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து பலி!

11 months baby died in kerala

Advertisement

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலிச்சேரி பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாபிக் என்பவருக்கு எக்ஸான் முகமது என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் முகமது ஷாபிக்கின் உறவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த முகமது ஷாபிப் மற்றும் அவரது மனைவியும் தனிமையில் இருந்து வந்தனர். 

இதனால் அவர்களது குழந்தையை தனியாக விளையாட விட்டுள்ளனர் அவர்களது வீட்டில். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. இதனையடுத்து பதறிப்போன குழந்தையின் பெற்றோர் குழந்தையினை வீடு முழுவதும் தேடி பார்த்தபோது வீட்டுக்கு வெளியே இருந்த தண்ணீர் வாளியில் குழந்தை மயங்கி கிடந்தது.  

ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் வெளியே செல்ல முடியாமல் கதறி அழுதுள்ளார். இதனால் அலறல் சத்தம் போட்டு பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைத்தனர். ஆனால்யாரும் வரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த முகமது ஷாபிக்கின் தந்தை அங்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். இறந்த அந்த குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் இருந்ததால் அந்த தனியார் மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது. அங்கிருந்த 5 நர்சுகளும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#child #died #KERALA
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story