அச்சோ... அயர்ன் பாக்ஸால் சூடு... 10 வயது சிறுமிக்கு கொடுமை...பைலட் மற்றும் கணவர் கைது.!
அச்சோ... அயர்ன் பாக்ஸால் சூடு... 10 வயது சிறுமிக்கு கொடுமை...பைலட் மற்றும் கணவர் கைது.!
இந்திய தலைநகர் டெல்லியில் 10 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் பெண் பைலட் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் பைலட் மற்றும் அவரது கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக பத்து வயது சிறுமியை தங்கள் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அந்த சிறுமியை வேலைக்கு சேர்த்த நாளிலிருந்து அந்த சிறுமிக்கு பல வன்கொடுமைகளை செய்து வந்திருக்கின்றனர்.
மேலும் சிறுமியின் கைகளில் இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து கொடுமைப்
படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.