மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே 1 முதல் 5 வரை பள்ளிகள் திறக்க அனுமதி!! முக்கிய தகவல் இதோ..
1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்ப
1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்படுவதாக உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு முதல் மூடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் பல மடங்கு குறைந்திருப்பதால், நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுவருகிறது.
தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சி முறையில் நடைபெற்றுவருகிறது. விரைவில் மற்ற வகுப்புகளும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்படுவதாக உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவித்துள்ளார். “வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362