×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த நடிகரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு.! என்ன காரணம் தெரியுமா.?

டெல்லி போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் தீப்சித்து பற்றி தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி சென்று விவசாயிகள் சங்கத்தின் கொடியை ஏற்றினார்கள். செங்கோட்டையில் கொடியேற்ற முக்கிய அம்சமாக இருந்தவர் நடிகர் தீப்சித்து என்று கூறப்படுகிறது

பஞ்சாப் நடிகரும், பாடகருமான தீப்சித்து குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டபோது வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பலர் செங்கோட்டைக்குள் நுழைந்து, அதன் மாடங்களில் மதக் கொடிகளையும், பிற கொடிகளையும் ஏற்றினர். 

குடியரசு தினத்தன்று பிரதமர் தேசிய கொடியேற்ற இருந்த நேரத்தில் இந்த சம்பவங்கள் நடந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அங்கு ஏற்பட்ட வன்முறையில், நடிகர் தீப்சித்து உள்பட சிலர் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

இந்தநிலையில், நடிகர் தீப்சித்து பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல பூடாசிங், சுக்தேவ் சிங் மற்றும் 2 பேருக்கு தலா 50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Deep Sidhu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story