×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாலிகட்டும் முன் கையை பிடித்து நிறுத்திய மணமகள்! திருச்சியில் ஒரு சோக சம்பவம்!

Bride rejected her groom at the end of her marriage

Advertisement

தாலி கட்டும் நேரத்தில் தனக்கு மாப்பிளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூறியதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த  34 வயதான ஜெகதீசன் என்பவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனது உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் செய்வதாக உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.

தனது திருமணத்திற்காக பல கனவுகளுடன் விடுமுறையில் வந்துள்ளார் மாப்பிளை ஜெகதீசன். இந்நிலையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு முன் மணப்பெண்ணிற்கு  ராகு-கேது தோஷம் பூஜை செய்யப்பட்டுள்ளது. மணப்பெண் கழுத்தில் தாலி கட்டுவற்காக மாப்பிளை மணமேடையில் காத்திருந்தார்.

திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார். அப்போது திடீரென மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும் பிடிக்காமல் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து இரு வீட்டாரையும் சேர்ந்த உறவினர்கள் கலந்து பேசினர். மணப்பெண் தனக்கு திருமணம் வேண்டாம் என கண்டிப்பாக கூறியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் மணமகள் இவ்வாறு நடந்துகொண்டதால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bride rejected groom #Tricy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story