×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ.. இப்படியும் நடந்துருச்சே! வாழைப்பழத்தை சாப்பிட்ட வாலிபர் மரணம்! கதறியபடி அம்மா கூறிய அதிர்ச்சி உண்மை!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே சிராங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் தமிழ்செல்வி

Advertisement

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே சிராங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்-தமிழ்செல்வி தம்பதியினர். அவர்களுக்கு 19 வயதில் கார்த்திக் மற்றும் 15 வயதில் கவிதாஸ் என 2 மகன்கள் உள்ளனர். கார்த்திக் தஞ்சையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த அவர் டி.வி. மீது இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கியபோது திடீரென கார்த்திக் வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவரது அம்மா என்னாச்சு, ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு பதறிபோன தமிழ்ச்செல்வி, அந்த பழம் எலிக்காக விஷம் கலந்து வைத்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திக்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #banana #rat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story