குடிபோதையில் அதிகாலையில் நடிகை கவுதமி வீட்டுக்குள் குதித்த இளைஞர்.! பரபரப்பு சம்பவம்.!
நடிகை கெளதமி வீட்டில் புகுந்து அதிகாலையில் இளைஞர் ஒருவர் திருட முயன்றதாக போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கவுதமி வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சுற்றுச் சுவரை ஏறி குதித்து வீட்டிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார். இதை பார்த்த வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.
இதனையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் இதுகுறித்து நடிகை கவுதமி புகார் அளித்து உள்ளார். நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை காவல் நிலைய போலீசார். இது குறித்து வழக்கு பதிவு செய்து, நடிகை கவுதமி வீட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து ஓடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீடுபுகுந்து திருட முயன்றவர் கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த பெயின்டர் பாண்டியன்(24) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பெயின்டர் பாண்டியன் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து பின், ஜாமீனில் விடுவித்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362