×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் ரொம்ப பெரிய தப்பு செஞ்சுட்டேன்.! வேதனையில் கதறும் கவர்ச்சிப்புயல் யாஷிகா!! வச்சு செய்யும் ரசிகர்கள்!!

yashika feel about iruttatharai murattukuthu movie

Advertisement

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார். இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள்.

அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும்  சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக்பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும் அத்தகைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சங்கள் செய்தும் வருகின்றனர். 

இதனால் பெரும் வருத்தம் அடைந்த யாஷிகா நடிகை ஒருவர் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அப்படியே நிஜத்திலும் இருப்பார் என்று நினைக்காதீர்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. நான் ஏன் இதை செய்தேன் என தற்போது மிகவும் வேதனைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashik anand #iruttarai murattu kuthu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story