விநாயகர் சிலை முன்பு இப்படியா செய்வது! நடிகை யாஷிகா மீது பொங்கும் பக்தர்கள்
Yaasika photo infront of vinayaga

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு ’துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் பிக் பாஸ் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
இளைஞர்களின் கனவு நாயகியாக தற்போது இருந்து வருகிறார். இவரது சமீபத்திய பொழுதுபோக்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சூடேற்றும் கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது.
தற்போது பிக் பாஸில் வந்த மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ஒரு பிள்ளையார் சிலை முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நிற்கிறார்.
என்னதான் இருந்தாலும் கடவுள் முன்பு இப்படி தொடையை காட்டி ஆபாச போஸ் கொடுப்பதா? என பலரும் தற்போது யாஷிகாவை விமர்சித்து வருகின்றனர்.