கேரளத்து குடி பொறுக்கிகள்.. மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சித்த ஜெயமோகன்!
கேரளத்து குடி பொறுக்கிகள்.. மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சித்த ஜெயமோகன்!
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த அவர், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது என்றும் அதில் காட்டுவது புனைவு அல்ல. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், குடி குடி என விழுந்து கிடப்பது, வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. எந்த பொது நாகரிகமும் அவர்களுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார். இந்த மலையாள பொறுக்கிகளுக்கு மற்ற மொழி தெரியாது. ஆனால் அவர்கள் மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என தெனாவட்டு இருக்கும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.