×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படுக்கையறையில் கணவரை குத்தி கொலை செய்த ஆசைமனைவி.! வாக்குமூலத்தை கேட்டு தலைசுற்றிப்போன போலீசார்.!

wife killed husbanf for his illegal affairs

Advertisement

மராட்டிய மாநிலம் நல்லோஸ்பரா பகுதியில் வசித்து வந்தவர் சுனில் கடம். இவரது மனைவி  ப்ரனாளி.இவர்களுக்கு இரு பெண்குழந்தைகள்  உள்ளனர்.இந்நிலையில் சுனில் மற்றும் ப்ரணாளிக்கு இடையே சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

 இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிஅளவில் ப்ரணாளி வீட்டுக் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த தனது மாமனார் மற்றும் மாமியாரை எழுப்பி சுனில் தன்னையே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என கதறி அழுதுள்ளார்.

இதனை தொடர்ந்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ப்ரணாளி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.பின்னர் தான்தான் எனது கணவரை குத்தி கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். 

மேலும் எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருந்தார். இதுகுறித்து எனக்கு தெரியவந்த நிலையில் நான் அவரை கண்டித்தேன்.  மேலும் கள்ளக்காதலை விட்டுவிடுமாறு எவ்வளவோ கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை வந்த நிலையில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவரை குத்தி கொன்றேன் என கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story